விடை வகை
முன்னுரை:
வினவப்படும் வினாவிற்கு ஏற்ப விடை அளிப்பது தான் மொழிநடையின் சிறப்பு .
தேர்வு நாளை நடைபெறுமா? எனக் கேட்ட ஒருவனிடம் என் தங்கை ஏழாம் வகுப்பில் படிக்கிறாள் எனக் கூறுவது தவறு. வினாவும் விடையும் பிழை இன்றி அமைதலே முறை.
வேறு பெயர்கள்:
இறை,செப்பு, பதில் என்பன விடையின் வேறு பெயர்கள்.
விடை வகை:
விடை எண் (எட்டு) வகைப்படும்.அவை ,
1.சுட்டு விடை
2.மறை விடை
3. நேர் விடை
4.ஏவல் விடை
5.வினா எதிர்
வினாதல் விடை
6.உற்றது உரைத்தல்
விடை
7. உறுவது கூறல்
விடை
8. இனமொழி விடை
என்பன.
1.சுட்டு விடை :
வினவும் வினாவிற்கு சுட்டி விடை அளிப்பது சுட்டு விடை ஆகும்.
(எ.கா)
★ தென்காசிக்குச்
செல்லும் வழி யாது?
★ சென்னைக்கு வழி
யாது ?
என்ற வினாவிற்கு இது என விடை அளிப்பது சுட்டு விடை ஆகும்.
2.மறை விடை:
வினவும் வினாவிற்கு எதிர்மறை பொருளில் விடை இருப்பின் மறைவிடை எனப்படும்.
(எ.கா)
★ இது செய்வாயா ?
என்ற வினாவிற்கு 'செய்யேன்' என விடையளித்தால் அது மறைவிடை எனப்படும்.
3. நேர் விடை :
வினவும் வினாவிற்கு உடன்பாட்டு பொருளில் விடை அளித்தால் அது நேர்விடை ஆகும்.
(எ.கா)
★ நீ நாளை பள்ளி
செல்வாயா?
இவ் வினாவிற்கு செய்வேன் என்று விடையளித்தால் அது நேர்விடை ஆகும்.
4.ஏவல் விடை :
வினவப்படும் வினாவிற்கு வினவியவரையே ஏவுதல் ஏவல் விடை எனப்படும்.
(எ.கா)
★ அங்காடிக்கு
செல்வாயா?
இவ் வினாவிற்கு நீயே செல் என்று விடையளித்தால் (வினவியவரையே ஏவுவதால்) அது ஏவல் விடை ஆகும்.
5.வினா எதிர் வினாதல் விடை :
வினவும் வினாவிற்கு விடையாக வினாவாகவே கூறுதல் வினா எதிர் வினாதல் விடை ஆகும்.
(எ.கா)
★ நீ தேர்வுக்குப்
படித்தாயா?
இவ்வினாவிற்கு விடையாக படிக்காமல் இருப்பேனா? என்று வினவுவது வினா எதிர் வினாதல் விடை ஆகும்.
6.உற்றது உரைத்தல் விடை:
வினவும் வினாவிற்கு தனக்கு உற்றதை விடையாக கூறுதல் உற்றது உரைத்தல் விடை ஆகும்.
(எ.கா)
★ நீ சொற்பொழிவு
ஆற்றுவாயா ?
இவ் வினாவிற்கு 'தொண்டை வலிக்கிறது' என்று தனக்கு நேர்ந்ததை கூறுவது உற்றது உரைத்தல் விடை ஆகும்.
7. உறுவது கூறல் விடை :
வினவும் வினாவிற்குத் தனக்கு நிகழப்போவதை விடையாக கூறுவது உறுவது கூறல் விடை ஆகும்.
(எ.கா)
★ நீ இதைச்
சாப்பிடுவாயா ?
என்ற வினாவிற்கு 'வயிறு வலிக்கும்' என்று கூறுதல் உறுவது கூறல் விடை ஆகும்.
8. இனமொழி விடை :
வினவும் வினாவிற்கு இனமான வேரூன்றை விடையாக் கூறுவது இனமொழி விடை ஆகும்.
(எ.கா)
★ நீ பாடுவாயா?
இவ்வினாவிற்கு 'ஆடுவேன்' எனக் கூறுதல் பாடலுக்கு இனமான ஆடலை குறிப்பிட்டமையால் இனமொழி விடை ஆகும்.
முடிவுரை:
★ சுட்டு,
★ மறை,
★ நேர்.
ஆகிய மூன்றும் வெளிப்படையாக விடையைக் கூறுவது ஆகும் .
★ஏவல் ,
★வினா எதிர் வினாதல்,
★உற்றது உரைத்தல்,
★உறுவது கூறல்,
★இனமொழி.
ஆகிய ஐந்தும் வினாக்களுக்கு உரிய விடையை குறிப்பால் உணர்த்துவன ஆகும்.
"சுட்டு மறைநேர் ஏவல்
வினாதல்
உற்ற(து) உரைத்தல்
உறுவது கூறல் இனமொழி எனும் என
இறையுள் இறுதி
நிலவிய ஐந்துமப்
பொருண்மையின் நேர்ப"
( நன்னூல் - 386 )
மீண்டும்
அடுத்த
பதிவில்.........🙏
👆This Content Sponsored By👇
"This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"



